சிறுபான்மை கட்சிகளின் இனவாதம் பயங்கரவாதத்திலேயே முடியும் அதை தடுக்க 22,23 யோசனைகள்
(ரொபட் அன்டனி)
பாராளுமன்றத் தேர்தல்களில் 5 ஆசனங்களைப்பெறும் சிறிய கட்சிகள் 100 ஆசனங்களைப் பெறும் பிரதான கட்சிகளை அச்சுறுத்தி தமக்கு தேவையான அமைச்சுக்களை பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்க உதவுகின்றன. இதனால் 100 ஆசனங்களை பெறும் பிரதான கட்சிகள் பாதிக்கப்படுகின்றன.
இது இனவாதத்தையே ஊக்குவிக்கும். இதனாலேயே அரசியலமைப்பின் 21 மற்றும் 22 ஆவது திருத்த யோசனைகளை தனிநபர் பிரேரணையாக கொண்டுவந்துள்ளேன் என்று ஆளும் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்துள்ள அரசியலமைப்பின் 21 மற்றும் 22 ஆம் திருத்த யோசனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தனிநபர் பிரேரணைகள் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்ஷ கேசரிக்கு தகவல் தருகையிலேயே இவற்றை குறிப்பிட்டார்.
நான் மூன்று மாதங்களுக்கு முன்னரே அரசியலமைப்பின் 21 , 22 ஆம் திருத்த யோசனைகளை தனிநபர் பிரேரணைகளாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டேன். 21 ஆம் திருத்தயோசனையானது பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தெரிவு தொடர்பாக அமைந்திருக்கின்றது.
இந்த நாட்டில் 1988 ஆம் ஆண்டு வரை மக்கள் பிரதிநிதி ஒருவர் தேர்தலில் தெரிவு செய்யப்படவேண்டுமாயின் அவர் சார்ந்த கட்சி குறித்த மாவட்டத்தில் 12.5 வீதமான வாக்குகளை பெறவேண்டியது அவசியமாக இருந்தது. ஒரு கட்சி ஒரு தேர்தல் மாவட்டமொன்றில 12.5 வீதமான வாக்குகளைப் பெறும் பட்சத்திலேயே தமக்கு ஒரு பிரதிநிதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு தகுதியைப் பெறுகிறது.
ஆனால் 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச இந்த சட்டத்தை மாற்றி 5 வீத வாக்குகளைப் பெற்றாலே ஒரு கட்சி பிரதிநிதியைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுவிடும் வகையில் ஒரு ஏற்பாட்டை கொண்டுவந்தார். 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக அக்கட்சி முன்வைத்த கோரிக்கையை ஏற்று ரணசிங்க பிரமேதாச இந்த சட்டத்தை மாற்றியமைத்தார்.
1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமானது 17 ஆம்திகதி அதாவது இரண்டு தினங்களுக்கு முன்னர் திருத்தப்பட்டது.
இந்த திருத்தம் காரணமாக அதன்பின்னர் எந்தவொரு பிரதான கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமையே காணப்பட்டது. ஆறு அல்லத ஏழு ஆசனங்களை தேர்தல்களில் பெற்றுக்கொள்ளும் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் ஆட்சியை தீர்மானிக்கும் நிலையை அடைந்தன.
ஐந்து ஆசனங்களை வைத்து கொண்டு 100 ஆசனங்களை பெற்ற கட்சிக்கு சவால் விடும் நிலைமை காணப்பட்டது. தமக்கு தேவையான அமைச்சுக்களை கேட்டு பெற்றுக்கொண்டனர். அது மட்டுமன்றி தேசிய கட்சிகளில் சிறுபான்மை மக்கள் உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பும் மட்டுப்படுத்தப்பட்டது. ஒரு காலத்தில் பிரதான கட்சிகளில் சிறுபான்மை கட்சிகள் உயர்ந்த பதவிகளில் இருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. இறுதியாக கபீர் கசீம் மட்டுமே அவ்வாறான ஒரு தலைவராக இருக்கிறார். அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் நிலைக்கு சென்றவர் என்பதை மறந்துவிடக்கூடாது.
கேள்வி: இதனால் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படுமே?
பதில்: அவ்வாறு நடக்காது. காரணம் எந்தவொரு சிறுபான்மை கட்சியும் தற்போது பாராளுமன்ற தேர்தல்களில் தனித்துப்போட்டியிடுவதில்லை. மாறாக ஏதாவது ஒரு பிரதான கட்சியுடன் ஒட்டிக்கொண்டே போட்டியிடுகின்றன. அப்போது அவர்களுக்கு தேவையான ஆசனங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணிக்கு மட்டும் இந்த சிக்கல் ஏற்படலாம். இவ்வாறு சிறுபான்மை கட்சிகள் இனவாதமாக செயற்பட முடியாது. இனவாதம் இறுதியில் பயங்கரவாதத்திலேயே சென்று முடியும். எனவே அதற்கு இடமளிக்க முடியாது.
இதேவேளை அரசியலமைப்பில் 22ஆவது திருத்தயோசனையையும் நான் சமர்ப்பித்திருக்கிறேன் அதில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களை ஜனாதிபதியே நியமிக்கவேண்டும் என்றும் அந்த நியமனத்தின்போது நீதி சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற முடியும் என்று ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபர் கணக்காளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற பொது செயலாளர் ஆகியோரை ஜனாதிபதியே நியமிக்கவேண்டும் என்றும் அதன்போது பிரதமர் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற முடியும் என்றும் ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
காரணம் தற்போது 19 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் உயர்நீதிமன்ற மற்றம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர்நாயகம், மற்றும் பாராளுமன்ற பொதுசெயலாளர் நாயகம் ஆகியோர் அரசியலமைப்பு பேரவையினாலேயே நியமிக்கப்படுகி்னறனர்.
அரசியலமைப்பு பேரவையில் அரசியல்வாதிகளே இடம்பெறுகின்றனர். சில அரசசார்பற்ற பிரதிநிதிகளும் இடம்பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டே நியமனங்களை செய்கின்றனர். இது நாட்டுக்கு நல்லதல்ல. இந்த நியமனங்கள் ஜனாதிபதியினால் செய்யப்படவேண்டும்.
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களை நியமிக்கும் போது ஜனாதிபதி நீதிசேவை ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற முடியும். காரணம் நீதியர்சர்கள் தொடர்பாக அனைத்து விடயங்களும் நீதி சேவை ஆணைக்குழுவிடமே உள்ளன. அதேபோன்று பிரதமர் மற்றம் பொது சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற்று சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர்நாயகம் மற்றும் பாராளுமன்ற பொதுசெயலாளர் ஆகியோரையும் ஜனாதிபதியே நியமிக்கவேண்டும்.
அதுமட்டுமன்றி நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பாக ஜனாதிபதியே அரசியலமைப்பு பிரகாரம் இருக்கின்றார். அவரே முப்படைகளின் தளபதியாகவும் இருக்கின்றார். எனவே ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க வேண்டும். அதற்கு இரண்டு அமைச்சர்கள் இருக்க முடியாது. இந்த விடயமும் 22 ஆவது திருத்த யோசனையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி: அப்படியானால் அரசியலமைப்பு பேரவையின் எதிர்காலம்?
பதில்: அரசியலமைப்பு பேரவை இல்லாது போவதே நல்லது என்றே தோன்றுகிறது. ஆனால் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை இருக்கலாம்.
கேள்வி: 19 ஆவது திருத்த சட்டத்திற்கு என்ன நடக்கும்?
பதில்: 19 ஆவத திருத்த சட்டத்தில் சில நல்ல விடயங்கள் உள்ளன. தகவலறியும் சட்டமூலம் போன்றவை சிறந்தவையாகும்.
He´s waste racist person then any others in Sri lanka.
ReplyDeleteஇந்தத் தீர்மானத்தில் சிறுபான்மையினருக்கு நன்மையும் உண்டு. உடைந்து உடைந்து கட்சியமைத்தால் பிரதிநிதிகளைப்பெற முடியாமல் போகுமிடத்து கூட்டுச் சேர்ந்து போகவேண்டிய கட்டாயம் ஏற்படும். மட்டுமன்றி உடைந்து சென்று ஆளுக்கொரு கட்சி அமைக்கும் அசிங்கமும் தொலையும். தேசியக்கட்சிகளோடு தனிப்பிரிவாக இயங்குவதுடன் தமது கோரிக்கைகளை வென்றெடுக்கலாம். ஆளுக்காள் இனவாதம் பேசி வாக்குச் சேகரிக்கும் நிலை ஏற்படாது. இது மிகவும் ஆபத்தான விளையாட்டாகும். இஸ்லாமிய வரலாற்றில் உதைய்பியா உடன்படிக்கையும் இவ்வாறான சாதகமான விளைவையே முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
ReplyDeleteபாராளுமன்ற தேர்தல் மாகாணசபை தேர்தல் இரண்டும் தொகுதிவாரி முறையில் நடாத்தவேண்டும், விகிதாதர பிரதிநிதித்துவ முறை முற்றாக நீக்கப்படல் வேண்டும்
ReplyDeleteVery good for country
ReplyDelete