Header Ads



ஆற்றில் மூழ்கி யாழ் - ஒஸ்மானியா கல்லூரி மாணவன் வபாத்


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள வடிச்சல் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணித்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 19.01.2020 பிற்பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் றஹுமான் முஹம்மத் அஸான் (வயது 16) என்பவரே பலியாகியுள்ளார்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை பொழுது போக்கிற்காகவும் கிராமத்தில் சமைத்து உண்பதற்காகவும் உறவினர்களுடன் வடிச்சல் குளத்திற்குச் சென்ற இந்தச் சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து நீராடியுள்ளனர்.

அப்பொழுது இவர் திடீரென குளத்தின் சேறும் நகதியுமான ஆழப் பகுதியில் மூழ்கியுள்ளார்.

சக நண்பர்கள் இவர் மூழ்குவதை அவதானித்து கூக்குரலெழுப்பியுள்ளனர்.

அப்பொழுது உதவிக்கு விரைந்தவர்களால்  நீரில் மூழ்கிய சிறுவன் மீட்கப்பட்டபோதும் அவர் உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற்றாய்வுப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சம்பவம் பற்றி கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.  

இவர் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.