டிரம்பின் கடிதம், ஜனாதிபதி கோத்தாபயவிடம் கையளிப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதன்மை பிரதி உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடிதமொன்றை இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் இந்த கடிதத்தை கையளித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடன் மில்லேனியம் சவால் உடன்படிக்கை,நல்லிணக்கம் மனித உரிமைகள் பிராந்திய விடயங்கள் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment