Header Ads



பல்டி அடிப்பதை தடுக்க, சட்டமொன்றை நிறைவேற்றுமாறு கோரிக்கை

இன்று நாடாளுமன்றத்துக்குள் ஒய்வு பெற்றுச் செல்ல வேண்டிய வயதில் பலர் உள்ளதாக தெரிவிக்கும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி, எம்.பிக்கள் ஓய்வு பெற்றுச் செல்வதற்கான திட்டமொன்று அவசிமெனவும் தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் சேவையிலிருப்பதற்கே வயதெல்லை ஒன்று காணப்படும் போது நாட்டில் சட்டம் வகுப்பவர்களுக்கு வயதெல்லை ஒன்று வரையறுக்கப்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார். 

அதேபோல்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லையை மட்டுப்படுத்து தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அவர்,  விரைவில் கட்சி தாவல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டமொன்றை நிறைவேற்ற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.