Header Ads



இன்று சாதாரண, வாட்டுக்கு மாற்றப்பட்ட ராஜித்த

லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று (01) பகல் சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித்த சேனாரத்ன கடந்த 30 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். 

ராஜித்த சேனாரத்ன லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது. 

அதற்கமைய முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று பகல் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.