கரு ஜயசூரியவை ஐதேக தலைவராக, நியமிக்க பௌத்த சங்கத்தினர் யோசனை
பௌத்த பிக்குமார் மற்றும் பௌத்த மக்களின் அன்பை வென்றெடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்குமாறு பௌத்த சங்கத்தினர் யோசனை முன்வைப்பதாக நீதியான சமூகத்திற்காக தேசிய அமைப்பின் பிக்கு பிரிவின் ஒருங்கிணைப்பாளரான முக்குவட்டவன சித்தத்த தேரர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் இன்று -07- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை உட்பட கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போதுள்ள தலைவர்களில் தலைவர் பதவிக்கு மிகவும் தகுதியான நபர் கரு ஜயசூரிய எனவும் கட்சியின் வெற்றிக்காக அனைவரும இணைந்து துரிதமாக இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சித்தத்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment