"காலாவதியான கைத் துப்பாக்கியை, வைத்திருந்தமைக்காக ரஞ்சன் கைது செய்யப்படவில்லை"
அனுமதிப்பத்திரம் காலாவதியான கைத் துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்படவில்லை என அரசாங்க ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத் கமகே தெரிவித்துள்ளார்.
மாறாக ஒருவரை கைது செய்வதற்கு பல தரப்பினருடன் மேற்கொண்ட தொலைப்பேசி உரையாடல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மையப்படுத்தியே அவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
Post a Comment