கோட்டாபயவின் கீழ் சஜித் பிரதமராக பதவிவகிப்பது, செயற்பாட்டு ரீதியானதாக இருக்காது
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தேவையான விதமாக அரசாங்கத்தை அமை்கக சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் சஜித் பிரேமதாச பிரதமராக பதவி வகிப்பது செயற்பாட்டு ரீதியானதாக இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சியமைக்கும் அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவி வகிப்பார். சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகிப்பார்கள் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment