Header Ads



நாட்டுக்கு நன்மை பயக்கும் பயணம் மேற்கொள்ளும் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்கு நன்மை பயக்கும் பயணமொன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவை ஹிகுரக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

கடந்த இரண்டு மாதக்காலப்பகுதியில் புதிய ஜனாதிபதிக்கு சிறந்த பயணம் ஒன்றை மேற்கொள்ளும் அவசியம் உள்ளதை காணக்கூடியதாய் உள்ளது. அதற்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். 

அரசியல் கட்சிகள் அல்ல பிரச்சினை, முதலில் நாடு, பின்னர் மக்கள் அதனை தொடர்ந்தே மற்றைய பிரச்சினைகள். 

நாட்டை நேசிக்கும், இந்நாட்டு குழந்தைகளை நேசிக்கும், மனிதர்களை நேசிக்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் இருப்பார்களாயின் அரசியலிலும் அரச சேவையிலும் அனைத்து இன பேதங்களையும் மறந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.