Header Ads



ஷாருக்கான் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது நானென சிலர் நினைத்துவிட்டனர்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஷாருக்கானை  இலக்கு வைத்து இலங்கையில் நடத்திய குண்டுத்தாக்குதல் குறித்த இரகசியங்கள் என எனக்கு எதுவுமே தெரியாது என ஆளும் தரப்பு எம்.பியான உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று -23- நடைபெற்ற தாவர வனவிலங்கினப் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவற்றைக் கூறினார். 

ஷாருக்கான் இலங்கைக்கு வருகை தந்த வேளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து எனக்கு இரகசியங்கள் தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறினார். 

இவ்வாறு அவர் கூறியதை  அடுத்து ஷாருக்கான் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது நானென  சிலர் நினைத்துவிட்டனர். முகப்புத்தகத்தில் அவ்வாறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. ஆனால் ஷாருக்கானை இலக்கு வைத்து நடத்தியதாக கூறப்படும் குண்டுத்  தாக்குதலில் சாதாரணமாக அனைவருக்கும் என்ன தெரியுமோ, காதுகளில் என்ன கதைகள் கேட்டதோ அதுமட்டுமே எனக்கும் தெரியும். அதைத் தாண்டிய இரகசியங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. பயம் வந்து விட்டது. உளற தொடங்கி விட்டான். பிடித்து அடிதாதால் எல்லாம் வெளியே வரும்

    ReplyDelete

Powered by Blogger.