Header Ads



பாடசாலை சென்று, நன்றி தெரிவித்தார் முஸாதிகா


திருகோணமலை மாவட்டம் மூதூர் சாபி நகரினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாத்திமா முஸாதிகா தனக்கு கற்பித்த ஆசிரிய ஆசிரியைகளுக்கும் அதிபருக்கும் தனது பெற்றோர் சகிதம் நேற்று வெள்ளிக்கிழமை (03) தான் கற்ற திருகோணமலை சாஹிராக் கல்லூரிக்கு சென்று நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

அண்மையில் வெளியான உயர்தரப்பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞானத் துறையில் முதல் இடத்தை பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது தனக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த முஸாதிகா தொடர்ச்சியான கல்விப் பணிகளை முன்னெடுத்த பல வழிகளில் ஒத்தாசைகளை வழங்கிய பாடசாலை அதிபர் அலி சப்ரி அப்துல் சலாம் உள்ளிட்ட பலருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

ஹஸ்பர் ஏ ஹலீம்



No comments

Powered by Blogger.