இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற, ஒன்று கிடையாது - பாராளுமன்றத்தில் றிசாத் உரை
''இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம்" என நிரந்தரமாக முத்திரை குத்தப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற ஒன்று கிடையாது எனவும், இஸ்லாமிய மார்க்கம் அடிப்படைவாதத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவனோ ஒருவன் செய்த குற்றத்துக்காக இஸ்லாமியர்களை குற்றம் சொல்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த குற்றத்தை செய்தவர்களை தாம் முழுமையாக காட்டிக்கொடுத்துள்ளதாகவும், அவர்களை முழுமையாக இல்லாதொழிக்க தாம் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புலனாய்வுப் பிரிவிற்கு தலைமை அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தவறு என்ற விதத்தில் சரத் பொன்சேகா கருத்தை வெளியிட்டதை ரிஷாட் பதியூதீன் இதன்போது நினைவூட்டினார்.
சஹ்ரான் என்ற ஒரு நபர் செய்த குற்றத்திற்காக, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் நிலவுகின்ற இவ்வாறான சிந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நாடு பிளவுப்படக்கூடாது எனவும், பயங்கரவாதம் தலைத்தூக்க கூடாது எனவும், நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.
Post a Comment