ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளின் ஊடாக, சட்டத்தை மடக்கிய விதம் தெளிவாகியுள்ளது
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை போன்று தற்போதைய அரசாங்கம் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் கைது செய்து ஊடகங்களில் காட்டுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்ட பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளின் ஊடாக சட்டத்தை மடக்கிய விதம் தெளிவாக தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களும் சட்டத்ததை மடக்கிய விதம் வெளியாகியுள்ளதாகவும் இன்று அவ்வாறான எந்தவொரு நிலமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment