Header Ads



வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி


(எம்.இஸட்.ஷாஜஹான்) 

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விழையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு  வியாழக்கிழமை (30-1-2020) பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் பாடசாலை மைதானத்தில்  நடைப்பெற்றது.

நிகழ்வில் நீர்கொழும்பு கல்வி வலய ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி கே. சிவகுமார்  பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

 ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட   செயற்குழு உறுப்பினர்களான ஜெயச்சந்திரன், அன்ரணி ராஜா ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

போட்டிகளின் முடிவில் பாத்திமா  இல்லம் புள்ளிகளைப் பெற்று 146 முதலாமிடம் பெற்று சம்பியனாகியது.  கைத்தான் இல்லம் 134  புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

பிரதம அதிதி திருமதி கே. சிவகுமார் போட்டிகளில் வெற்றிபெற்ற முதலாமிடம் பெற்ற சம்பியனாகிய பாத்திமா இல்லத்திற்கு  வெற்றிக் கிண்ணத்தை வழங்குவதையும், இரண்டாமிடம் பெற்ற இல்லத்திற்கு  அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் இரண்டாமிடம் பெற்றதற்கான கிண்ணத்தை வழங்குவதையும், ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட   செயற்குழு உறுப்பினர்களான  ஜெயச்சந்திரன், அன்ரணி ராஜா ஆகியோர் கிரிக்கட் மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கிண்ணங்களை வழங்குவதையும மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  பரிசில்கள் வழங்குவதையும் காணலாம்.



No comments

Powered by Blogger.