ரஞ்சனுக்கு நித்திரை வரவில்லையாம்..! மெத்தை கேட்டு அடம்பிடிப்பு...!!
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனக்கு நித்திரை வரவில்லை என்பதனால் தொடர்ந்து மெத்தை வழங்குமாறு கோரி வருவதாக தெரியவந்துள்ளது.
எனினும் அவரது கோரிக்கையை மெகசின் சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்.
தனக்கு சிறைச்சாலைக்குள் நித்திரை வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெத்தை கோரிக்கையை நிராகரித்த அதிகாரிகள் அதிக தடிமன் கொண்ட மெத்தை விரிப்புகள் இரண்டை அவருக்கு வழங்கியுள்ளனர்.
இரண்டு விரிப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளமையினால் அதனை அவர் நிராகரித்துள்ளார்.
பின்னர் ஒரு விரிப்பை மாத்திரம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஹிருணிக்காவின் மடி கேக்குதோ???
ReplyDeletenot good
ReplyDelete