Header Ads



முல்லைத்தீவை சேர்ந்தவருக்கு கொரோனா, வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட து !

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக  சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில் அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு  பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் விஜிதரன் தெரிவித்துள்ளார் .

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து கடந்தவாரம் முல்லைத்தீவு வந்த குடும்பஸ்தர் பயணம் செய்த விமான  பயணத்தின் போது சீனாவினை சேர்ந்தவர்களும் இவரோடு பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் அவர் தனது சொந்த ஊரான முல்லைத்தீவிற்கு வந்தபோது அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் வைத்தியசாலையில் சென்று சிகிச்சை பெற்றுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம வைத்தியசாலையில் கொரோனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளுடன் இவர் காணப்பட்ட காரணத்தால் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக இவர் களனியில் அமைந்துள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில்

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்தியஅதிகாரி விஜிதரன்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் இந்த வைரஸ் தொடர்பில் விளிப்புணர்வுடன் செயற்படுமாறும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள வைத்தியசாலையில் நாடுமாறும்  அதிகளவில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.