அமெரிக்கா - ஈரான் பதற்றம், இலங்கை ஆழ்ந்த கவலை
ஈரானின் இராணுவத் தளபதி ஜெனரல் குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை நிவர்த்தி செய்ய அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.
Post a Comment