Header Ads



கைது செய்யப்படுவாரா ரிஷாத்...? பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின்கீழ், சிறப்பு விசா­ர­ணை ஆரம்­பம்

கைது செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத சந்­தேக நபர் ஒரு­வரை விடு­விக்க பாது­காப்புத் தரப்­புக்கு அழுத்தம் பிர­யோ­கித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரி­வினர் நேற்று 13 கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2,3,4,5 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில்,அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1), 3 (2) ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழும் தண்­டனை சட்டக் கோவையின் 486 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மொன்றைப் புரிந்­துள்­ளா­தாகக் கரு­தியே இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இது­கு­றித்து சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த பொலிஸ் தலை­மை­ய­கத்தில் செய்த முறைப்­பாடு, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஊடாக மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு அவ­ரின்கீழ் மேல் மாகாண தெற்கு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பா­ளரின் ஆலோ­ச­னைக்­க­மைய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அந்த விசா­ரணைப் பிரி­வி­னரால் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத சந்­தேக நபரை விடு­விக்க அப்­போ­தைய அமைச்­ச­ரான ரிஷாத் பதி­யுதீன், அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்­க­வுக்கு தொலை­பே­சியில் அழைத்­தமை, சட்­டத்தின் ஆட்சி மீதான பாரிய தாக்­கு­த­லென முறைப்­பாட்­டாளர் தமது முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்­ள­தா­கவும், இதே­போன்று மேலும் பல பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களை விடு­விக்க ரிஷாத் பதி­யுதீன் அழுத்தம் கொடுத்­தாரா என்­பது குறித்தும் தேட வேண்­டு­மென அவர் கோரி­யுள்­ள­தா­கவும் பொலிஸார் மன்­றுக்கு நேற்று விஷேட அறிக்­கை­யூ­டாகத் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் ரிஷாத் பதி­யுதீன் சந்­தேக நபரை விடு­விக்க அழுத்தம் கொடுத்­தமை தொடர்பில் அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி செய்­தி­யாளர் சந்­திப்­பொன்­றினை நடாத்தி வெளி­யிட்ட கருத்­துக்கள் ஊட­கங்­களில் வெளி­யான நிலையில், அவற்றை ஒளி­ப­ரப்­பிய 5 ஊடக நிறு­வ­னங்­க­ளி­லுள்ள செம்­மைப்­ப­டுத்­தப்­ப­டாத அந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் காணொ­லி­களை விசா­ர­ணை­க­ளுக்கு சமர்ப்­பிக்க உத்­த­ர­விட வேண்­டு­மென இதன்­போது விசா­ர­ணை­யா­ளர்­களால் நீதிவானிடம் கோரப்பட்டது.

அந்தக் கோரிக்கைக்கு அனுமதியளித்த பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன, இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார். -Vidivelli

எம்.எப்.எம்.பஸீர்

3 comments:

  1. ரிஷாத்தை கைது செய்வதால் உண்மை இன்னும் மறைக்கப்படும். முதலில் மை3 யையும் ரணிலையும் கைது செய்து 5 வருடங்களாவது சிறையில் வைத்தால் சிலவேளை உண்மை வௌிவரலாம். அந்த உண்மை வௌிவராமல் தடுக்கும் முயற்சி தான் இந்த ரிஷாத் நாடகம்.

    ReplyDelete
  2. எது good எது bad என்று விளங்காத விசருகள் எல்லாம் comments எழுதுதுகள்.

    ReplyDelete

Powered by Blogger.