Header Ads



கொழும்பில் இப்படியும் நடந்தது

கொழும்பில் பெண் போன்று தொலைபேசியில் குறுந்தகவல் பரிமாறி ஆண் ஒருவரை ஏமாற்றிய நபர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இளம் பெண் போன்று பேஸ்புக் ஊடாக இளைஞர் ஒருவருடன் நட்புறவு ஏற்படுத்திய நபர்கள், இரத்மலானை பிரதேசத்திற்கு குறித்த இளைஞனை வரவழைத்து பாழடைந்த வீதியில் வைத்து அவரை தாக்கியுள்ளார்கள்.

பின்னர் அவரது கை மற்றும் கழுத்தில் இருந்த தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற இருவரை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக அடையாளம் காணப்பட்ட பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞனை ரத்மாலானைக்கு வரவழைத்த இருவர், இந்த மோசடி வேலையை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய 24 வயதுடைய இரத்மலானை இளைஞன் மற்றும் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களால் திருடப்பட்ட நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.