இறுதி தீர்மானம் நாளை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படுமா இல்லையா என்பது குறித்து இறுதி தீர்மானம் நாளை நடைபெறும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று 29 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்திற்கு அமைய செயற்குழுவின் தீர்மானம் அமையும்.
தலைவர் பதவி தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடிப்பதற்காகவே நாளை செயற்குழுக் கூட்டப்படுகிறது.
அனைத்து உறுப்பினர்களின் முடிவுகளுக்கு அமைய ஜனநாயகமான முறையில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment