Header Ads



கிறேண்ட்பாஸ் பள்ளிவாசலையும், ராகம வைத்தியசாலை தொழுகையறையை மீண்டும் திறந்து தருமாறு கோரிக்கை

  ராகம மாவட்ட வைத்தியசாலையில் இயங்கி வந்த தொழுகை அறையை மீண்டும் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவிடம், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம்  விடுத்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக அவர் உறுதியளித்ததாக, சம்மேளனத் தலைவர் அஸ்லம் ஒஸ்மான் தெரிவித்தார். 

   ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து அன்று முதல் இன்று வரை ராகம வைத்தியசாலையின் தொழுகை அறை மூடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தீவிரவாதம் இல்லை. சுமூக நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில், குறித்த தொழுகை அறை விரைவில் திறக்கப்பட வேண்டும் என, பைஸர் முஸ்தபா எம்.பி. யிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். 

   இதேவேளை, பல வருடங்களாக மூடப்பட்டுள்ள கிறேண்ட்பாஸ் மோலவத்த பள்ளிவாசல் தொடர்பிலும் அரசியல்வாதிகளிடம் பலவிடுத்தம் கோரிக்கை விடுத்தோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. எனினும், அதற்கான தீர்வுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே, இப்பகுதி வாழ் மக்களின் நலன் கருதியும், இப்பள்ளிவாசலும்  உடனடியாகத் திறக்கப்படல் வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன் வைத்துள்ளோம். 

    இந்த இரு கோரிக்கைகளுக்கும் மிகத் துரிதமாகத் தீர்வு பெற்றுத் தருவதாக, பைஸர் முஸ்தபா எம்.பி. எம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும், சம்மேளனத் தலைவர் அஸ்லம் ஒஸ்மான் மேலும் சுட்டிக்காட்டினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments

Powered by Blogger.