ஈராக் - ஈரானிய வான் பரப்புக்களைத் தவிர்ப்பதற்கு, இலங்கை விமான சேவை தீர்மானம்
பாதுகாப்பு நிலைமை கருதி, லண்டன் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமானப் பயணத்தின் போது ஈராக், ஈரானிய வான் பரப்புக்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை விமான சேவை தீர்மானம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மற்றம் ஈரானுக்கிடையில் தற்போது எழுந்துள்ள பதற்மான சூழ்நிலையை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கிடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரானிய புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சொலைமானி கொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment