Header Ads



கொரோனா தொடர்பில் உண்மைக்கு புறம்பான, பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்


கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பில் அரச சுகாதார அதிகாரிகளால் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, சிலரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும், அவ்வாறு வேறு எந்த வைத்தியசாலைகளிலும் அவ்வாறான நோயாளர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.