Header Ads



ஈரானை தாக்க, அமெரிக்க கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் - ஜனாதிபதி பொறுப்பு கூற வேண்டும்

இன்று அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்­கு­மி­டையில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்க இராணுவம் ஈரான் இரா­ணுவத் தள­ப­தி­மீது தாக்­குதல் நடத்தி கொலை செய்­தி­ருக்­கின்­றது. இந்­நி­லையில், ஈரா­னுக்கு எதி­ராகத்தாக்­குதல் மேற்­கொள்ள அமெ­ரிக்க யுத்­தக்­கப்­பல்கள் இலங்­கையை சுற்­றி­யி­ருக்கும் இந்து சமுத்­தி­ரத்தை நோக்கி வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன என ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­துடன் இங்­கி­ருந்து தாக்­குதல் நடத்­தப்­பட்டால் 2007இல் இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் இதற்குப் பொறுப்புக் கூற­வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வந்த ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டன உரை மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி இன­வா­தத்தை எதிர்ப்­பதாகத் தெரி­விக்­கின்­ற­போதும் அவ­ருடன் இருக்கும் ஒரு சிலர் அதனை போஷித்து வரு­கின்­றனர். ஏப்ரல் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்ற பின்னர் அதனை பயன்­ப­டுத்­திக்­கொண்டு தேர்தல் மேடை­தோறும் இன­வா­தத்தை தூண்­டியே தேர்தல் பிர­சாரங்­களில் அவர்கள் ஈடு­பட்­டு­வந்­தனர். இனங்­க­ளுக்­கி­டையில் வைராக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­களும் குரோ­தத்தை வளர்த்­து­வந்­த­வர்­களும் இன்று ஜனா­திப­தி­யு­டனே இருக்­கின்­றனர். இந்த சக்­திகள் ஒன்­றி­ணைந்தே கோத்­தா­பய ராஜபக் ஷவை வெற்­றி­பெறச் செய்­தார்கள்.

அன்று பண்­டா­ர­நா­யக்­கவும் இவ்­வாறு செயற்­பட்டே 1956இல் வெற்­றி­பெற்றார். இதனால் இறு­தியில் அவர் இன­வாத, மத­வாத முன்­ன­ணி­க­ளுடன் கூட்­டி­ணைந்து செயற்­பட்­டதால் தனது உயி­ரையும் இல்­லா­ம­லாக்­கிக்­கொண்டார். அதனால் அர­சியல் வர­லாற்றில் பண்­டா­ர­நா­யக்­கவின் பய­ணத்தை சற்றுப் பின்­நோக்கிப் பார்க்­க­வேண்­டு­மென ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன்.

ஜனா­தி­பதி இன்று இணைந்­தி­ருப்­பது இவ்­வா­றான விஷப்­பாம்­பு­க­ளு­ட­னாகும். அவர்­க­ளுடன் இணைந்தே பய­ணிக்­கின்றார். அதனால் அந்த விஷப்­பாம்­புகள் எந்த நேரம் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டு­மெனத் தெரி­விக்­க­மு­டி­யாது.

ஏனெனில் அவர் உரு­வாக்­கி­யி­ருக்கும் இன­வாதக் கூட்­ட­ணியை மீண்டும் நல்­வ­ழிக்குத் திருப்­பு­வது இல­கு­வான விட­ய­மல்ல. தேர்­தலில் வெற்­றி­பெற்ற பின்னர் எத­னையும் பேசலாம். ஆனால் தேர்­தலை வெற்­றி­கொள்ள அடிப்­ப­டை­யாக கடைப்­பி­டித்­தது, இன­வா­தத்­தையும் மத­வாத்­தையும் என்­பதை மறந்­து­வி­ட­வேண்டாம். அதனால் அந்த வெற்­றியின் பெறு­பேறு மிகவும் பயங்க­ர­மா­ன­தாகும். அதனால் ஜனா­தி­பதி தனது பய­ணத்தை மாற்­றிக்­கொள்ள முயற்­சிக்­க­வேண்டும்.

அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் வீட்­டி­லி­ருந்து பொலி­ஸா­ரினால் கைப்­பற்­றப்­பட்ட இறு­வட்­டுக்­களின் ஒலிப்­ப­தி­வுகள் இன்று சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வரு­கின்­றன. பொலி­ஸா­ரி­ட­மி­ருந்த இந்த இறு­வட்­டுக்கள் எப்­படி அர­சி­யல்­வா­தி­களின் கரங்­க­ளுக்கு சென்­றன?. அப்­ப­டி­யானால் பொலி­ஸாரை யார் தங்­களின் தேவைக்­காகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர் என்­பதை உணர்ந்­து­கொள்­ளலாம்.

மேலும், இன்று அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்­கு­மி­டையில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்க ராணுவம், ஈரான் இரா­ணுவத் தள­ப­தி­மீது தாக்­குதல் நடத்திக் கொலை செய்­தி­ருக்­கின்­றது. ஆனால், ஏகா­தி­பத்­தி­ய­வா­தத்­துக்கு விரோ­த­மா­ன­வ­ரெனத் தெரி­விக்கும் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குண­வர்­தன இது­தொ­டர்­பாக எந்த அறி­விப்­பையும் விடுக்­க­வில்லை. ஈரா­னுக்கு எதி­ராகத் தாக்­குதல் மேற்­கொள்ள அமெ­ரிக்க யுத்­தக்­கப்­பல்கள் இலங்கையை சுற்றியிருக்கும் இந்து சமுத்திரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

அவ்வாறு அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டால், 2007இல் அமெரிக்காவுடன் மேற்கொண்ட எக்சா ஒப்பந்தத்தில் யுத்தத்துக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டமையே காரணமாகும். அவ்வாறு இடம்பெற்றால் 2007இல் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.-Vidivelli

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்

No comments

Powered by Blogger.