Header Ads



எரிபொருள் மோசடி - 7 இலங்கைய்கள் நைஜீரியாவில் கைது

சட்டவிரோத எரிபொருள் மோசடி தொடர்பில் 7 இலங்கையர்கள் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நைஜீரியா கடற்படையினர் கடந்த மாதத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

சந்தேகநபர்களுக்கிடையில் 7 இலங்கையர்கள், 57 நைஜீரிய பிரஜைகள் மற்றும் கானா நாட்டு பிரஜைகள் இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது 7 படகுகள் கடற்படையால் பொறுப்பேற்கப்பட்டுள்ள நிலையில் அவர்களால் திட்டமிடப்பட்டிருந்த பாரியளவான எரிபொருள் மோசடி வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தால் எரிபொருள் தொழிற்துறைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்ததாக நைஜீரியா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.