எதிர்க்கட்சித் தலைவரானார் சஜித் - பாராளுமன்றம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய இது தொடர்பான அறிவிப்பினை சற்று முன்னர் நாடாளுமன்றில் விடுத்துள்ளார்.
2
ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் பின்னர் பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது.
அப்போது கோப் விசாரணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சி எம் பிக்கள் பலர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ரஞ்ஜித் சொய்சாவின் மறைவையடுத்து இரத்தினபுரி மாவட்ட புதிய எம் பியாக வருண லியனகே சபையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து பாராளுமன்றம் மீண்டும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Post a Comment