கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டுபோக, புதிதாக 4 ரயில் எஞ்சின்கள் இறக்குமதி
கொழும்பிலிருந்து அறுவைக்காடு வரை குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக 4 ரயில் எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மாநகர அமைச்சினால் ரயில் எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ரயில்கள் ரயில்கள், மலையக மார்க்க சேவைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தவிர மேலும் 4 ரயில் பெட்டிகள் அடுத்த மாதமளவில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
What happened to all those protests and rallies against dumping Colombo garbage in Puttalam? Have the so called Muslim leaders given in? Looks like Champika having the last laugh.
ReplyDelete