ஹப்புத்தளையில் உடைந்து விழுந்த ஹெலி, 4 பேர் பலி - விபத்து பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனம்
ஹப்புத்தளை, பகுதியில் இன்று (03) காலை உடைந்து விழுந்த ஹெலியில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானப்படைக்கு சொந்தமான Y 12 ரக விமானமே விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வீரவில பகுதியில் இருந்து பயணித்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விமான விபத்தின் போது, அருகிலிருந்த வீட்டில் வசித்த பெண் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹெலிகொப்டர் உடைந்து விழுந்த பிரதேசம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஹெலிகாப்டர் இல்ல
ReplyDelete