Header Ads



சூழ்ச்­சிக்­கான வரு­ட­மாக 2020 அமை­யப்­போ­கின்­றதா..?

(நா.தனுஜா)

ஜனா­தி­ப­தியின் எல்­லை­யற்ற நிறை­வேற்­ற­தி­கா­ரத்தை மீண்டும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்கும் முயற்­சி­களை கட்சி பேதங்­களைக் கடந்து, ஜன­நா­ய­கத்­துக்கு மதிப்­ப­ளிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தோற்­க­டிக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர அறை­கூவல் விடுத்­தி­ருக்­கிறார்.

இலங்­கையின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது கூட்­டத்­தொ­டரை நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­பித்­து­வைத்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ, 'சுபீட்­சத்தின் நோக்கு' என்ற கொள்கைப் பிர­க­ட­னத்தை சபையில் முன்­வைத்து தனது அக்­கி­ரா­சன உரையை ஆற்­றினார். அதன்போது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் சில மாற்­றங்­களைச் செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றும் அவர் தனது உரையில் குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தை நீக்­கு­வ­தாக ஏற்­க­னவே ஜனா­தி­பதி கூறி­யி­ருந்த நிலை­யி­லேயே அக்­கி­ரா­சன உரை­யிலும் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை ஏற்­ப­டுத்­து­வது அவ­சியம் என்ற கருத்தை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார். இத­னை­ய­டுத்தே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர அவ­ரு­டைய டுவிட்டர் பக்­கத்தில் மேற்­கண்­ட­வாறு பதி­விட்­டி­ருக்­கிறார். இப்­ப­திவில் அவர் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது:

'ஒரு அர­சி­ய­ல­மைப்பு சூழ்ச்­சிக்­கான வரு­ட­மாக 2020 அமை­யப்­போ­கின்­றதா? ஜனா­தி­ப­தியின் எல்­லை­யற்ற நிறை­வேற்­ற­தி­கா­ரத்தை மீண்டும் ஏற்படுத்தி வலுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படவிருக்கும் முயற்சியை கட்சி பேதங்கள் அனைத்தையும் கடந்து, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்' என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

No comments

Powered by Blogger.