Header Ads



புதிய 20 ரூபா நாணய குற்றி, 2000 ரூபா நாணய தாள்களையும் வெளியிட தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி புதிய வங்கி சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தற்போது அந்த புதிய வங்கி சட்டத்தை சட்ட மூலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கமைய அதனை அடுத்த வருடத்தில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் வங்கிக் கொள்கையின் 13 ஆவது வருடாந்த அறிக்கையை வெளிடும் நிகழ்விலேயே மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஸ்மன் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, நிதி பரிவர்த்தனை அறிக்கை சட்டம், பண மோசடி தடுப்பு சட்டம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு பணம் வழங்குவதை தடுப்பது குறித்த சட்டம் ஆகியவை தொடர்பான மேலும் பல திருத்தங்கள் இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அத்துடன் இறுதி அனுகூலம் பெறும் பயனாளியுடன் தொடர்புடைய நிறுவனம் சார்ந்த சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆண்டில் கொண்டாடப்படவுள்ள மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 20 ரூபா நாணய குற்றி ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நடைமுறையில் இருக்கும் 2000 ரூபா பெறுமதியான நாணய தாள்களுக்கு பதிலாக மற்றுமொரு புதிய நாணய தாள்களை அச்சிட திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஸ்மன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.