மாளிகாவத்தை மையவாடி தீர்ப்பு மார்ச் 16 இல்
மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான காணியில் ஒரு பகுதியை சட்டவிரோதமாக அபகரித்து கட்டிடமொன்றினை நிர்மாணித்தமைக்கு எதிராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நிறுவன உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றின் வழக்கு இல. 00193/13 இன் மேன்முறையீட்டு தீர்ப்பினை வழங்குவதற்காக மாவட்ட நீதிமன்றின் பதிவாளர் முறையீட்டாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மத உரிமைகளுக்கான அமைப்பு முஸ்லிம் மையவாடி காணியை சட்டவிரோதமாக அபகரித்து மாடிக் கட்டிடமொன்றினை நிர்மாணித்து வந்தவருக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தது. இவ்வமைப்பின் தலைவர் அஸ்லம் ஒத்மான் மற்றும் அப்துல் அஸீஸ் செய்யத் நிஹார் உட்பட்டோர் குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட வழக்கில் மேன்முறையீட்டு தீர்ப்பினை அறிவிப்பதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் மத உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் அஸ்லம் ஒத்மான் இது தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்;
‘குறிப்பிட்ட காணியை அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நீதிமன்றம் நில அளவையாளர் ஒருவரை நியமித்திருந்தது. அவரது அறிக்கையின்படி முஸ்லிம் மையவாடி காணியில் 11 பேர்ச்சஸ் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்டகால விசாரணையின் பின்பு தீர்ப்பொன்று கிடைக்கப் போகிறது’ என்றார்.-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல் ,
ALHAMDULILLAH
ReplyDeleteகுறித்த தீர்ப்பு அத்துமீறிய நிறுவனத்திற்கு சாதகமாகவே வரும், ஏனெனில் அந்த நிறுவனம் ராஜா பக்சேக்களின் பினாமி!
ReplyDeleteYa Allah bring forth the victory for justness! Aameen.
ReplyDelete