Header Ads



ஐதேக தலைவர் யார் - 16 ஆம் திகதி வாக்கெடுப்பு


ஐக்கிய தேசிய கட்சியினதும், முன்னணியின் தலைமைத்துவத்தையும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸவிற்கே வழங்க வேண்டும் என சஜித் அணியினர் விடாப்பிடியாக கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் இது குறித்து செயற்குழு கூட்டத்தில்  வாக்கெடுப்பு ஒன்றினை  நடத்தி இறுதி தீர்மானத்தை எட்டுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றைய -09- பாராளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

அதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டமும், கட்சியின் செயற்குழு கூட்டமும் எதிர்வரும் 16ம் திகதி வியாழக்கிழமை மீண்டும் கூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.