புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக கூறுவது பொய், எந்த சந்தர்ப்பத்திலும் UNP யை விட்டு விலகமாட்டேன் - சஜித்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு தாம் விலகப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு தாம் விலகப்போவதில்லை. புதிய கட்சியையும் தாம் ஆரம்பிக்க போவதில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment