Header Ads



புற்றுநோயினால் தந்தை இறப்பு - அஞ்சலி செலுத்திவிட்டு O/L பரீட்சைக்கு சென்ற மாணவன்


கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் -02-ஆரம்பமாகின்றன.

இந்த நிலையில் திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் மகனொருவர் தனது தந்தையின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பரீட்சை எழுத சென்றுள்ள சோக சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.டீ.சமிந்த லசந்த என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சமிந்த லசந்தவின் சடலம் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இன்றைய தினம் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.