வெளிநாடுகளில் இருந்து வரும் Missed call குறித்து, மிக அவதானமாக இருக்கவும்
கையடக்க தொலைபேசிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு முறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்புக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சோதனையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேடமாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்தும் அதிகமாக ஒரு மறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்பின் பின்னர் அந்த இலக்கத்திற்கு மீண்டும் அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
Reason???
ReplyDelete