Header Ads



சுகம் விசாரிக்க நீர்கொழும்பு, சிறைச்சாலைக்குச் சென்ற ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.

இதன் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு, சிலாபம் கட்சி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு இன்று காலை திடீர் விஜயம் செய்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பல மாதகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு முன்னாள் அமைப்பாளர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து , ஐக்கிய தேசியக் கட்சியின் சிலாபம் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர ஆகியோரை சந்தித்து சுகநலம் விசாரிப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலைக்கு சென்றதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் ஊடகவியலாளர்கள் சிறைச்சாலைக்குள் சென்று செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்கவிடம் கருத்து கேட்பதற்காக சிறைச்சாலை வாயிலில் ஊடகவியலாளர்கள் காத்து நின்ற போதிலும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்து அங்கிருந்து சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.