Header Ads



ஜனாதிபதியின் பெயரை தவறாக, பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகராக தன்னை அறிமுகப்படுத்தி மொரடுவை பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

அவர் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு தற்போதைய நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த தினங்களில் சில ஊடகங்கள் வௌிப்படுத்தியிருந்தன. 

இந்நிலையில், ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றும் அல்லது அச்சுறுத்தும் நபர்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கோரியுள்ளது.

1 comment:

  1. எங்கட ஊர்ள நிறைய பேர் இருக்கானுகள்

    ReplyDelete

Powered by Blogger.