Header Ads



றிசாத்துக்கு எதிரான, நம்பிக்கையில்லா பிரே­ரணை ரத்தானாது

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பாரா­ளு­மன்ற அமர்வு முடி­வுக்குக் கொண்டு வந்­த­தை­ய­டுத்து இரத்­தா­கி­யுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தலின் பின்பு அச்­சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் சிலரை விடு­விப்­ப­தற்கு இரா­ணுவ தள­ப­திக்கு அழுத்தம் பிர­யோ­கித்­தமை, சினமன் கிரேன்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் நடத்­திய குண்­டு­தாரி இன்சாப் அஹமட் இப்­ராஹீம் என்­ப­வ­ருக்குச் சொந்­த­மான தொழிற்­சா­லைக்கு கைத்­தொழில் அமைச்சின் மூலம் வெற்றுத் தோட்­டாக்கள் விநி­யோ­கித்­தமை உட்­பட பல குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரால் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­தோடு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிர­லிலும் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தது.

பாரா­ளு­மன்ற அமர்வு முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலையில் பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிரலும் ரத்­தா­கி­யுள்­ளது. அதனால் அந்த நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையும் அகற்­றப்­பட்­டுள்­ள­தென பாரா­ளு­மன்ற அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இதே­வேளை பாரா­ளு­மன்றம் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டதும் தேவை­யேற்­படின் அந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மீண்டும் முன்­வைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

அத்­தோடு பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த கடந்த 51 நாட்கள் அர­சாங்­கத்தில் கட­மை­யாற்­றிய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்தல் உட்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளல் தொடர்பான 6 பிரேரணைகளும் பாராளுமன்ற அமர்வு முடிவுக்கு வந்ததையடுத்து இரத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

4 comments:

  1. He must be investigated and punished

    ReplyDelete
  2. Proper investigation had been carried out by the parliamentary sub committee and the CID and he was acquitted from all the allegations.

    ReplyDelete
  3. @Jong Ayya, Ranil Government's investigations were fake, and an eye wash to protect the ministers.
    Therefore it cannot be acceptable.

    Gota Govt needs to reinvestigate him again and punish

    ReplyDelete
  4. Ajan,
    All the Judges from Chief Justice downwards are already started obeying orders from Gota’s government. You are talking about fake investigation from previous government.

    ReplyDelete

Powered by Blogger.