சுமன ரத்தின தேரரை, தேசிய வீரராக காட்ட முயற்சி
மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவர் கிறிஸ்தவ போதகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அமைதி காக்குமாறு மெதடிஸ்த தேவாலயத்தின் தலைவரான ஆயர் ஆசிரி பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைதியை விரும்பும் மக்கள் இந்த காணொளியை பார்த்து பதற்றமடையவேண்டாம் என்று ஆயர் கேட்டுள்ளார். இதன் மூலம் தாய்நாட்டில் ஏற்படக்கூடிய அமைதியின்மையை தவிர்க்கமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
50 வயதான மங்களராமயவின் சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தாக்குதல் நடத்திய காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இதன் மூலம் குறித்த தேரரை வீரராக காட்டும் முயற்சியும் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment