சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தலைவராக, மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக, முன்னாள் இராணுவ அதிகாரியும்,முன்னாள் வடக்கு மாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று பதவியேற்றுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், யாழ். படைகளின் கட்டளை தளபதியாகவும், பின்னர் வடக்கு மாகாண ஆளுநராகவும் இவர் பதவி வகித்திருந்தார்.
கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்தில், தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எந்த நிறுவனத்திலும் போராட்டம்,பணிப்பகிஸ்கரிப்பு, சட்டப்படி வேலை கத்தாவ எதுவும் இனி இடம் பெறாது போலும்.
ReplyDelete