Header Ads



முஸ்லிம் தலைவர்களால்தான், குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன - கருணா

புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளின் காலத்தில் பல முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த முதலீடுகள் அங்கு தற்போது பதுக்கப்பட்டுள்ளது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து செயற்படும் சமூக சேவை அமைப்பான நீரோ அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று -22-  மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததன் பின்னர் நாங்கள் கிராமம் கிராமமாக சென்று அரசியல் தெளிவூட்டல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். ஏனென்றால் நாங்கள் முப்பது வருடகாலமாக யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக எங்களுக்கு அரசியல் உரிமையை பாதுகாக்கத் தெரியவில்லை.

அதில் தவறிழைத்துவருகின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தல் அதற்கு ஒரு உதாரணமாகும்.

நிச்சயமாக கோட்டாபய ராஜபக்சதான் வெல்வார் என்பது அனைவருக்கும் தெரியும். சஜித்திற்குப் பின்னால் நின்றவர்கள் இனத்துவேஷம் பேசுகின்ற முஸ்லிம் தலைவர்களாவர்.

அவர்களால்தான் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்றன. அவ்வாறிருந்தும் தமிழர்கள் சஜித்திற்கே வாக்குகளை அளித்தனர். அன்னச் சின்னத்திற்கே புள்ளடிகளை இட்டனர்.

மட்டக்களப்பில் கோட்டாபயவிற்கு முப்பத்து ஆறாயிரம் வாக்குகளே கிடைத்தன. மூன்று இலட்சத்து எண்பத்தாறாயிரம் வாக்காளர்களை கொண்ட மட்டக்களப்பில் ஒரு இலட்சம் வாக்குகள் கோட்டாபயவிற்கு கிடைத்திருந்தாலும் நாம் இங்கு பலமானதொரு சக்தியாக இருந்திருப்போம்.

ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்த நாட்டில் முஸ்லிம்களின் வாக்குகளோ தமிழர்களின் வாக்குகளோ தேவையில்லை, சிங்கள மக்களின் வாக்குகள் மட்டும் போதும் என்பதற்கு உதாரணமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவார்.

கோட்டாபய அவர்களுக்கு வாக்களித்ததன் மூலம் சிங்கள மக்கள் தமிழர்களை காப்பாற்றிவிட்டனர். சஜித் ஜனாதிபதியாக வந்திருந்தால் இங்கிருக்கின்ற தேவாலயங்களிலெல்லாம் குண்டுகளே வெடித்திருக்கும். அதற்காக சிங்கள மக்களை பாராட்ட வேண்டும்.

வருகின்ற பத்து ஆண்டுகளுக்கு கோட்டாபய ராஜபக்ச அவர்களே ஜனாதிபதியாக இருப்பார். அவரை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் சித்திரை மாதம் வரவிருக்கின்ற தேர்தலை திட்டமிட்டு சிறந்த முறையில் எதிர்கொள்ள வேண்டும்.

நாங்கள் எல்லோரும் சேர்ந்து எமது மக்களை காப்பாற்றக்கூடிய வளத்தினை பெருக்கக்கூடிய சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். அதுவே எங்கள் நோக்கமாகும்.

இன்று எத்தனையோ இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி இருக்கின்றனர், வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் நாடாளுமன்றமாகும்.

பகட்டிற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோமானால் அவர்களால் எந்தவித பயனும் இருக்கப்போவதில்லை.

நாங்கள் அமைச்சர்களாக இருந்தபோது 3500 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினோம். குளங்கள், பாதைகளை அமைத்தோம். எத்தனையோ அபிவிருத்திகளை செய்தோம்.

வைத்தியசாலைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கினோம். இதற்காக நாங்கள் பணம் எதனையும் பெறவில்லை. நேர்மையான முறையில் வேலை செய்தோம். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.

கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட வறுமையின் கொடுமையால் நிறைய பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தூக்கிட்டு தற்கொலை செய்தோரின் வீதம் அதிகமாகும். மட்டக்களப்பில் மாத்திரம் நுண்கடன் தொல்லை காரணமாக 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளிலிருந்து நாங்கள் மீள்வதற்கு வரவிருக்கின்ற தேர்தலை சிறந்தவொரு களமாக நாங்கள் பயன்படுத்த வேண்டும்.

எமது மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டும். சிங்கள மக்கள் 88 சதவீதம் வாக்களித்திருக்கின்றனர். முஸ்லிம் மக்கள் 98 சதவீதம் வாக்களிக்கின்றனர். ஆனால் தமிழ் மக்கள் வாக்களிப்பது 60 வீதத்தை தாண்டுவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீதம் முஸ்லிம்களும் 75 வீதம் தமிழர்களும் இருக்கின்ற நிலையில் 25 வீத முஸ்லிம்களுக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். 75 வீத தமிழர்களுக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். இதுவே வழமையாக நடைபெறுகின்றது. இதனை நாங்கள் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழர்களுக்காக குரல்கொடுத்து தமிழ் சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நான் விட்டெறிந்துவிட்டு வந்தேன். முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதை விரும்பாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கையினையும் நிராகரித்தேன்.

அந்தவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு நான் வெளிப்படையாகவே அறிவித்திருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தேர்தல் காலத்தில் எனது வீட்டுக்கு வந்து எனது ஆதரவினை கோரியபோது நான் ஆதரவினை வழங்கியிருந்தேன்.

அன்று ஐக்கிய தேசிய கட்சியில் கணேசமூர்த்தி போட்டியிட்டு அமீர் அலியை நாடாளுமன்றம் அனுப்பினார், பிள்ளையான் தேர்தலில் போட்டியிட்டு ஹிஸ்புல்லாவினை நாடாளுமன்றம் அனுப்பினார். இதுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது.

எதிர்வரும் தேர்தலில் அந்த தவறை நாங்கள் விடக்கூடாது. தனித்துவமாக நின்று உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும். அதுதான் எமது நோக்கமாகும்.


13 comments:

  1. பலம் வாய்ந்த விடுதலை போரை தவுடு பொடியாக்கிய நீ எல்லாம் சமுகத்தின் முன் நின்று பேச உனக்கு வெக்கம் சூடு சுனை கடுகளவும் இல்லைதான்

    ReplyDelete
  2. கேவலமான,கேடுகெட்ட, நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு அலைந்து திரியும் பாசிச நாயே!
    உனக்கு அரசியல் மட்டுமன்றி உலகமே தெரியாத விசர் பிடித்தவன் என்பதை நீரே ஏற்றுக் கொண்டது போதும்.
    உனக்கு நகரமும் மக்களும் பிடிக்காது. மாறாக காடும் கொலைகளும் தான் பிடிக்கும். அதற்காகவே உன்னைச் சார்ந்த பாசிச சிந்தனையாளர்களை ஒன்று சேர்க்கப் பார்க்கிறாய்.ஆனால் உனக்குப் பின்னால் வியாள தோசம் பிடித்த ஒருசிலர் மட்டுமே உள்ளனர் என்பதை எதிர்வரும் தேர்தலில் அனைவரும் கண்டுகொள்வர்.அத்தோடு ஜனாதிபதி அவர்கள் உன்னைக் களற்றிவிடுவார்.அப்போது சொறி நாயாக அலைந்து திரிவாய்.உனது மக்களே உன்னைக் கல்லெறிந்து விரட்டுவதை நாங்கள் பார்த்து ரசிக்கும் காட்சிகளை கோடீஸ்வரனே தற்போது டைறக் பண்ணுவது நல்லதோர் ஆரம்பமே.
    அப்போது முஸ்லிம்களின் வீடுகளைத் தட்டி தஞ்சம் கோரும் நிலையும் ஏற்படலாம்.

    ReplyDelete
  3. 300க்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டபோது அவர்களைச் சுட்டுக் கொலை செய்வதற்கு முன்னின்று அந்த ஈனக்காரியத்தைச் செய்த கொலைகாரர்கள் சுதந்திரமாக வீராப்பு அரசியல் பேசித்திரியும் போது சட்டம் ஏன் மௌனமாக இருக்கின்றது என்பதை பொதுமக்களாகிய எமக்கு உள்ள பெரிய கேள்வி. இதற்கு குறைந்த பட்சம் கிழக்கில் வாழும் துறைசார்ந்த முஸ்லிம்கள் ஏன் சட்ட நடவடிக்கையில் இன்னும் ஈடுபடவில்லை என்பது வேறு பெரிய ஆச்சரியத்துக்கும் கவலைக்கும் உரிய விடயமாக இருக்கின்றது.

    ReplyDelete
  4. Ivan oru kinaththu thavalai unnai parliment anuppa Tamil makkal enna muttalkala.

    ReplyDelete
  5. This guy is repeating this over and over every other day like a scratched vinyl record. Why JM news also publishing the same stupid stuff over and over?

    ReplyDelete
  6. Iwarda petcha entha thalaiwarahlum sewimasukkathu ponaal iwanin koookural adankum

    ReplyDelete
  7. Dei AJAN enge olimthu kondu irukkirai.? Weliye wa bayandhan goliue:)

    ReplyDelete
  8. ade kolaveri piditha psycho unnai naiyudan kooda oppida mudiyathu enendal adu naiku kevalam, ALISAHIR MOULANA unnai iyakatil irundu pirinda neram kapatra villai endal unakku naraga vedanayai un iyakkam kati irukum.. nee nadigai KASTHURIYODA pota koothu ulaga TAMILAR gal arivargal.. vaithuku sotha thingiravanku manadalim eram undu unnamadri malatha thingindu un inathin retham kudikra vanku adu vilangadu...

    ReplyDelete
  9. நீ லட்சக் கணக்கான மக்களை கொலை செய்த கொலையாலி

    ReplyDelete
  10. தமிழர்களின் துரோகி,அரந்தலாவையில் 300 மேற்பட்ட பிக்குகலை கொலை செய்தவன்,தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவன்,கிழக்கில் முஸ்லிம் மக்களை அதுவும் சிறுவர்,பெண்கள் உட்பட எத்தனையோ கிராமங்களில் கொலை செய்த பிணம் தின்னி.

    ReplyDelete
  11. இவன் ஒரு மனநோயாளி, இவனைப்பிடித்து
    போலீஸ் ஊடாக அங்கொடை வைத்தியசாலைக்கு மிக விரைவில் அனுப்ப வேண்டும்.
    விசர் நாய் சாகும் காலத்தில் அதிகமாக துடிக்கும்.

    ReplyDelete
  12. முல்லிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட கொலைகளுக்கு இவனும் ஒரு காரணம்.

    ReplyDelete

Powered by Blogger.