Header Ads



ஜனாதிபதியின் செயலுக்கு ரஞ்சன் பாராட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டமை சிறந்த செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அந்த செயலை பாராட்டும் முகமாக தாம் அவருக்கு இருமுறை தலைவணங்குவதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று குறுகிய காலமே ஆகும் நிலையில், அவருக்கு தமது பதவியில் கடமைகளை முன்னெடுக்க காலஅவகாசம் வழங்கபட வேண்டும் எனவும் அவரின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தாம் தயாரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் தேர்தல் மேடைகளில் தமது வேட்பாளரை வெற்றிபெற செய்வதற்கு தாம் உள்ளிட்ட எவராக இருந்தாலும் வாய்க்கு வந்த மாதிரி பேசுவது சகஜம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நிறைவுபெற்று குறுகிய காலமே ஆகும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்ட கோட்டாபய ராஜபக்ஷ தமது கடமைகளை முன்னெடுத்து நாட்டை கட்டியெழுப்ப குறைந்தது இரண்டு வருடங்களாவது தேவைப்படும் எனவும் அவருக்கு அந்த காலவகாசத்தை வழங்க வேண்டுமென்றும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவருக்கு UNP பக்கம் கொஞ்சம் முறுகல் சில வேளை அடுத்த தேர்தல் பின் அங்கே போனாலும் போவார் போல் இருக்கிறது

    ReplyDelete

Powered by Blogger.