Header Ads



பாராளுமன்றத் தேர்தலில், புது முகங்கள் அறிமுகம் - சில விபரங்கள் வெளியாகியது

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்சி பல புது முகங்­களை கள­மி­றக்­கு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யிடப் பட்­டுள்­ளன.இதே வேளை ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி உட்­பட சில புது­மு­கங்கள் தேசிய பட்­டியல் மூலம் இணைத்­துக்­கொள்­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழக வைத்­திய பீடத்தின் பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன, பேரா­தனை பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி சரித ஹேரத், கலா­நிதி நாலக கொட­ஹேவா, ‘வியத்­மக’ அமைப்பின் அநுர பர்­ணாந்து, தேசிய இளைஞர் சேவை மன்­றத்தின் முன்னாள் தலைவர் சட்­டத்­த­ரணி லலித் பியும் பெரேரா, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் டில்சான் உட்­பட மேலும் சிலர் பொதுத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன அநு­ரா­த­பு­ரத்­திலும், கலா­நிதி சரித ஹேரத் குரு­நா­க­லிலும், கலா­நிதி நாலக கொட­ஹேவா மற்றும் சட்­டத்­த­ரணி லலித் பியும் பெரேரா என்போர் கம்­ப­ஹா­விலும், தில­க­ரத்ன டில்சான் காலி மாவட்­டத்­திலும், அநுர பெர்­ணாந்து கொழும்­பிலும் போட்­டி­யி­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை, தேசியப் பட்­டியல் மூலம் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் முன்னாள்ஆளுநர் அஜித் நிவாப் கப்ரால், கெவிது குமாரதுங்க ஆகியோர் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-Vidivelli

1 comment:

  1. VERY BAD NEWS FOR OLD PARTY SUPPORTERS.AMONG SLPP THERE IS THREE GROUPS.ONE GOTHA GROUP(ELIYA-VIYATHGAMA) TWO MAHINDA GROUP,THREE BASIL GROUP.IN ADDITION NAMAL AND SHIRANTHI HAS SOME CATCHERS.THEN THERE IS SLFP JUMPERS LIKE SB,DILAN,DUMINDA,DAYASISRI,MAHINDA AMEREWEERA,GROUP.THEN THE POLITICAL BEGGERS LIKE WEERAWASE AND GAMANPULLE.THE FIGHT FORE NOMINATION AND NATIONAL LIST POSITION WILL CREATE LOT OF BACK STAPPING AND DIVISIONS IN DISTRICT LEVELS THIS WILL BE A BONUS POSITION FOR UNP TO GET SOME ADDITIONAL BENEFIT.

    ReplyDelete

Powered by Blogger.