Header Ads



எனக்கு எதிராக கட்சிக்குள்ளேயே, சதித்திட்டம் தீட்டப்பட்டது - சஜித்


அரசியலில் இருந்து தம்மை நீக்குவதற்கான முயற்சி கட்சிக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தொம்பேயில் இன்று -18- மக்களை சந்தித்த போதே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கிய மக்களை சந்திப்பதற்காக கிராமங்கள் தோறும் செல்கின்ற சஜித் பிரேதமாச இன்று தொம்பே தொகுதி அமைப்பாளர் ஹர்ஷன ராஜகருணாவின் வீட்டில் மக்களை சந்தித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த மக்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

No comments

Powered by Blogger.