Header Ads



விபத்தினால் இளைஞன் பலி - மோட்டார் சைக்கிளும் எரிந்து சாம்பல் (படங்கள்)


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - 

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி கிரான்குளம் எனுமிடத்தில் சனிக்கிழமை 21.12.2019 இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து, அதே திசையில் கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சைக்கிள் மீது மோதி மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கடுக்காமுனையைச் சேர்ந்த  எஸ். அருள்ராஜ் (வயது 19) இளைஞன் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் இடம்பெற்ற பொழுது அந்த இடத்தில் குழுமிய பொதுமக்கள் ஆவேசமடைந்து பஸ் சாரதியைக் கடிந்து கொண்டு கலகம் விளைவிக்க முயற்சித்தனர்.

அதேவேளை நிலைமையை கேள்விப்பட்டு ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.