Header Ads



ராஜிதவினால் ஐதேக மீதான, மக்களின் நம்பிக்கை இழக்கப்படுகிறது - ரணிலிடம் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் மீதுள்ள மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் இழக்கப்பட்டு வருவதாக கட்சியின் உறுப்பினர்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த தேர்தல் காலத்தில் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் சுவிஸ் தூதுவராலய ஊழியர் கடத்தல் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் என்பன கட்சிக்கு அவப்பெயரை தேடித் தந்துள்ளன என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அல்லவெனவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.