தந்தை இல்லை, ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் சாதனைபடைத்த மாணவி
இறுதி யுத்தத்தில் தந்தையை தொலைத்துவிட்டு சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி.
வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் அ பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்று சாதித்துள்ளார்.
இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவருடைய தாயாரையும் பாராட்டி வருகின்றனர். வறுமையிலும் கணவர் காணாமல் போயுள்ள நிலையிலும் தனது இரண்டு பிள்ளைகளையும் கல்வியில் முன்னேற்றுவதற்காக உழைத்த தாயார் போற்றுதலுக்குரியவர் .
– வன்னி செய்தியாளர் –
வாழ்த்துக்க்கள்
ReplyDeleteCongratulations wish your bright future all the best
ReplyDeleteதமிழர்களின் சொத்து கல்வி.
ReplyDeleteCongratulation sister i am greetings you
ReplyDeleteAll the best
ReplyDeleteAll the best sister👍
ReplyDeleteAll the best.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாஅழிய
ReplyDeleteCongratulation from the bottom of my heart. Great Mother and Kids. Keep it up
ReplyDeleteMay Allah Bless your future...
great ,great
ReplyDeleteCommon brothers dig deep into your pockets... Mere wishes won't help her active her goals
ReplyDelete