Header Ads



ரிசாட், அசாத், ஹக்கீம் ஆகியோருக்கு சட்டத்தில் விலக்கு அளிக்கப்படக்கூடாது

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாய் நாட்டுக்கான படைவீரர்கள் என்ற அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இன்று -19- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

குற்றவியல் சட்டம் அனைவருக்கும் ஒரேவிதமானதேயாகும். சம்பிக்க, ராஜித சேனாரட்ன, ரிசாட் பதியூதீன், அசாத் சாலி, ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இதில் விலக்கு அளிக்கப்படாது.

குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு, அதற்கு சபாநாயகரின் அனுமதி அவசியமில்லை.

ஊடகவியலாளர்களான பிரகீத் எக்னெலிகொட, கீத் நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் கடத்தல், தாக்குதல், லசந்த விக்ரமதுங்க கொலை போன்ற விசாரணைகளை ஆரம்பிப்போம்.

சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும். பாட்டலியிடம் எக்னெலிகொட பற்றி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.