Header Ads



பள்ளிவாசல் சுவரில் உருவம் வரைவு,, கட்டுப்பாடுகள் கொண்டுவர தீர்மானம்


நாடெங்­கு­முள்ள வெற்றுச் சுவர்கள் மற்றும் மதில்­களை அழ­கு­ப­டுத்தி அவற்றில் சித்­தி­ரங்கள் வரை­யப்­பட்­டு­வரும் நிலையில் சித்­தி­ரங்கள் வரை­வதில் சில கட்­டுப்­பா­டுகள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன.

கொழும்பு – கண்டி வீதி­யோ­ரத்தில் வேவல் தெனிய – ரதா­வ­வடுன் னயில் அமைந்­துள்ள பள்­ளி­வா­ச­லுடன் இணைந்­துள்ள சுவரில்கடந்த வாரம் உரு­வப்­ப­டங்கள் வரை­யப்­பட்­ட­மைக்கு முஸ்­லிம்­களால் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது.

இச்­சம்­பவம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ பிர­த­மரும், கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிர­தி­பொ­லிஸ்மா அதி­பரின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது.

இத­னை­ய­டுத்தே சில தினங்­களில் பொலிஸ் திணைக்­க­ளத்­தினால் வெற்றுச் சுவர்­களில் சித்­திரம் வரை­வது தொடர்பில் சுற்று நிரு­ப­மொன்று வெளியி­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கொழும்பு – கண்டி வீதியில் அமைந்துள்ள ரதாவடுன்ன பள்­ளி­வாசல் சுவரில் உரு­வப்­ப­டங்கள் வரை­யப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொது ஜன பெர­மு­னவின் முஸ்லிம் பிரிவின் தலைவர் மில்பர் கபூரைத் தொடர்பு கொண்­ட­போது அவர் வெளி­நாட்டு விஜ­யத்தில் இருக்­கின்ற நிலையில் அவ­ரது ஊட­கப்­பி­ரிவு இது தொடர்­பான தக­வல்­களை வழங்­கி­யது.

ஸ்ரீலங்கா பொது ஜன­பெ­ர­மு­னவின் முஸ்லிம் பிரிவின் தலைவர் மில்பர் கபூரும் ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட ஆலோ­ச­கரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான அலி­சப்­ரியும் இவ்­வி­வ­கா­ரத்தை ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பொலிஸ்மா அதி­பரின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்­துள்­ளனர். பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் சுற்று நிருபம் ஒன்­றினை வெளி­யி­ட­வுள்ளார்.

இதன் அடிப்­ப­டையில் பள்­ளி­வா­சல்கள் உட்­பட எந்த மதத்­த­லங்­க­ளுக்கும் சொந்­த­மான வெற்றுக் சுவர்­க­ளிலும் தனி­யா­ருக்குச் சொந்­த­மான வெற்றுச் சுவர்கள் மதில்­க­ளிலும் அனு­மதி பெற்றுக் கொள்­ளப்­பட்டே சித்­திரம் வரைய முடியும். மதத்­த­லங்­களின் சுவர்­களில் குறிப்­பாக பள்­ளி­வாசல் சுவர்களில் உரு­வப்­ப­டங்கள் வரை­வது தவிர்க்­கப்­பட வேண்டும் என்று சுற்று நிருபம் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

சித்­தி­ரங்கள், போதைப்­பொருள் ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு மற்றும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைய வேண்­டு­மென ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன என ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.
பள்­ளி­வாசல் சுவர்­களில் அனு­மதி பெறப்­ப­டாது. சித்­தி­ரங்கள் வரை­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்டால் அது தொடர்பில் பொலி­ஸுக்கு அறி­விக்க முடியும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் இந்த ஆலோ­ச­னையைப் பின்­பற்­று­மாறு கேட்­கப்­பட்­டுள்­ளனர்.

இது­தொ­டர்பில் கலா­சார அமைச்­சரும், பிர­த­ம­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவின் முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான ஆலோ­சகர் நகீப் மெள­லா­னாவை தொடர்பு கொண்டு வினவியபோது ரதாவடுன்ன பள்ளிவாசல் சுவரில் பள்ளிவாசலின் அனுமதி பெற்றுக்கொள்ளாது உருவப்படங்கள்  வரைந்துள்ளமை  தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கலாசார அமைச்சின் செயலாளரை நேரில் சந்திக்கவுள்ளதாகவும் கூறினார்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ. பரீல்

2 comments:

Powered by Blogger.