என்னைச் சிறைச்சாலையில் அடைத்தாலும், நான் மீண்டு வருவது உறுதி
நான் எவ்வித குற்றங்களையும் செய்யவில்லை. அரசியல் பழிவாங்கலுக்கமையவே கைது செய்யப்படவுள்ளேன். என்னைச் சிறைச்சாலையில் அடைத்தாலும் நான் மீண்டு வருவது உறுதி என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜித சேனாரத்ன, வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்றுப் பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை கைது செய்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் உரையாடியுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ராஜபக்ச அரசின் அரசியல் பழிவாங்கலினால் எமது அரசியல் பணிகள் ஸ்தம்பிதம் அடையக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
எனவே, அதுவரை எமது மக்களைப் பொறுமையுடன் இருக்குமாறு சொல்லுங்கள் என்றும் இதன்போது தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
KAVANAMADAA KAVANAM.
ReplyDeleteMEENDUM MUTHALAI THALAI KAATTUMAM.
KAKKOOS VAAI ENNACHI????.